சங்கீதம் 1 – Psalms 1


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Psalms Chapter 1 In Tamil With English Reference


1 - துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

English:- Blessed Is The Man Who Does Not Walk In The Counsel Of The Wicked Or Stand In The Way Of Sinners Or Sit In The Seat Of Mockers.

சங்கீதம் 1-1 - Psalms 1-1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2 - கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

English:- But His Delight Is In The Law Of The Lord, And On His Law He Meditates Day And Night.


3 - அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

English:- He Is Like A Tree Planted By Streams Of Water, Which Yields Its Fruit In Season And Whose Leaf Does Not Wither. Whatever He Does Prospers.

சங்கீதம் 1-3 - Psalms 1-3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

4 - துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

English:- Not So The Wicked! They Are Like Chaff That The Wind Blows Away.

சங்கீதம் 1-4 - Psalms 1-4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5 - ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

English:- Therefore The Wicked Will Not Stand In The Judgment, Nor Sinners In The Assembly Of The Righteous.

சங்கீதம் 1-5 - Psalms 1-5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

6 - கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

English:- For The Lord Watches Over The Way Of The Righteous, But The Way Of The Wicked Will Perish.

சங்கீதம் 1-6 - Psalms 1-6கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.


Previous Chapter Next Chapter