நீதிமொழிகள் 3 – Proverbs 3


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Proverbs Chapter 3 In Tamil With English Reference


1 - என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

English:- My Son, Do Not Forget My Teaching, But Keep My Commands In Your Heart,

நீதிமொழிகள் 3-1 - Proverbs 3-1என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

2 - அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

English:- For They Will Prolong Your Life Many Years And Bring You Prosperity.


3 - கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

English:- Let Love And Faithfulness Never Leave You; Bind Them Around Your Neck, Write Them On The Tablet Of Your Heart.

நீதிமொழிகள் 3-3 - Proverbs 3-3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

4 - அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

English:- Then You Will Win Favor And A Good Name In The Sight Of God And Man.

நீதிமொழிகள் 3-4 - Proverbs 3-4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

5 - உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

English:- Trust In The Lord With All Your Heart And Lean Not On Your Own Understanding;

நீதிமொழிகள் 3-5 - Proverbs 3-5உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

6 - உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

English:- In All Your Ways Acknowledge Him, And He Will Make Your Paths Straight.

நீதிமொழிகள் 3-6 - Proverbs 3-6உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

7 - நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

English:- Do Not Be Wise In Your Own Eyes; Fear The Lord And Shun Evil.

நீதிமொழிகள் 3-7 - Proverbs 3-7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

8 - அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

English:- This Will Bring Health To Your Body And Nourishment To Your Bones.

நீதிமொழிகள் 3-8 - Proverbs 3-8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

9 - உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

English:- Honor The Lord With Your Wealth, With The Firstfruits Of All Your Crops;

நீதிமொழிகள் 3-9 - Proverbs 3-9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

10 - அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

English:- Then Your Barns Will Be Filled To Overflowing, And Your Vats Will Brim Over With New Wine.


11 - என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

English:- My Son, Do Not Despise The Lord 'S Discipline And Do Not Resent His Rebuke,

நீதிமொழிகள் 3-11 - Proverbs 3-11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

12 - தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

English:- Because The Lord Disciplines Those He Loves, As A Father The Son He Delights In.

நீதிமொழிகள் 3-12 - Proverbs 3-12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

13 - ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

English:- Blessed Is The Man Who Finds Wisdom, The Man Who Gains Understanding,

நீதிமொழிகள் 3-13 - Proverbs 3-13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

14 - அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

English:- For She Is More Profitable Than Silver And Yields Better Returns Than Gold.

நீதிமொழிகள் 3-14 - Proverbs 3-14அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

15 - முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

English:- She Is More Precious Than Rubies; Nothing You Desire Can Compare With Her.

நீதிமொழிகள் 3-15 - Proverbs 3-15முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

16 - அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

English:- Long Life Is In Her Right Hand; In Her Left Hand Are Riches And Honor.

நீதிமொழிகள் 3-16 - Proverbs 3-16அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

17 - அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

English:- Her Ways Are Pleasant Ways, And All Her Paths Are Peace.

நீதிமொழிகள் 3-17 - Proverbs 3-17அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

18 - அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

English:- She Is A Tree Of Life To Those Who Embrace Her; Those Who Lay Hold Of Her Will Be Blessed.

நீதிமொழிகள் 3-18 - Proverbs 3-18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

19 - கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

English:- By Wisdom The Lord Laid The Earth's Foundations, By Understanding He Set The Heavens In Place;

நீதிமொழிகள் 3-19 - Proverbs 3-19கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

20 - அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப்பெய்கிறது.

English:- By His Knowledge The Deeps Were Divided, And The Clouds Let Drop The Dew.


21 - என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.

English:- My Son, Preserve Sound Judgment And Discernment, Do Not Let Them Out Of Your Sight;

நீதிமொழிகள் 3-21 - Proverbs 3-21என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.

22 - அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

English:- They Will Be Life For You, An Ornament To Grace Your Neck.

நீதிமொழிகள் 3-22 - Proverbs 3-22அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

23 - அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.

English:- Then You Will Go On Your Way In Safety, And Your Foot Will Not Stumble;

நீதிமொழிகள் 3-23 - Proverbs 3-23அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.

24 - நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.

English:- When You Lie Down, You Will Not Be Afraid; When You Lie Down, Your Sleep Will Be Sweet.

நீதிமொழிகள் 3-24 - Proverbs 3-24நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.

25 - சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.

English:- Have No Fear Of Sudden Disaster Or Of The Ruin That Overtakes The Wicked,

நீதிமொழிகள் 3-25 - Proverbs 3-25சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.

26 - கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

English:- For The Lord Will Be Your Confidence And Will Keep Your Foot From Being Snared.

நீதிமொழிகள் 3-26 - Proverbs 3-26கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

27 - நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.

English:- Do Not Withhold Good From Those Who Deserve It, When It Is In Your Power To Act.

நீதிமொழிகள் 3-27 - Proverbs 3-27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.

28 - உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

English:- Do Not Say To Your Neighbor, "Come Back Later; I'll Give It Tomorrow"- When You Now Have It With You.

நீதிமொழிகள் 3-28 - Proverbs 3-28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

29 - அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

English:- Do Not Plot Harm Against Your Neighbor, Who Lives Trustfully Near You.

நீதிமொழிகள் 3-29 - Proverbs 3-29அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

30 - ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.

English:- Do Not Accuse A Man For No Reason- When He Has Done You No Harm.

நீதிமொழிகள் 3-30 - Proverbs 3-30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.

31 - கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

English:- Do Not Envy A Violent Man Or Choose Any Of His Ways,

நீதிமொழிகள் 3-31 - Proverbs 3-31கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.

32 - மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.

English:- For The Lord Detests A Perverse Man But Takes The Upright Into His Confidence.

நீதிமொழிகள் 3-32 - Proverbs 3-32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.

33 - துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

English:- The Lord 'S Curse Is On The House Of The Wicked, But He Blesses The Home Of The Righteous.

நீதிமொழிகள் 3-33 - Proverbs 3-33துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

34 - இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

English:- He Mocks Proud Mockers But Gives Grace To The Humble.

நீதிமொழிகள் 3-34 - Proverbs 3-34இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

35 - ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

English:- The Wise Inherit Honor, But Fools He Holds Up To Shame.

நீதிமொழிகள் 3-35 - Proverbs 3-35ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.


Previous Chapter Next Chapter