நீதிமொழிகள் 2 – Proverbs 2


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 2 – Read Holy Bible Book Of Proverbs Chapter 2 In Tamil With English Reference


1 - என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

English:- My Son, If You Accept My Words And Store Up My Commands Within You,

நீதிமொழிகள் 2-1 - Proverbs 2-1என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

2 - நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

English:- Turning Your Ear To Wisdom And Applying Your Heart To Understanding,


3 - ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

English:- And If You Call Out For Insight And Cry Aloud For Understanding,

நீதிமொழிகள் 2-3 - Proverbs 2-3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

4 - அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

English:- And If You Look For It As For Silver And Search For It As For Hidden Treasure,

நீதிமொழிகள் 2-4 - Proverbs 2-4அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

5 - அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

English:- Then You Will Understand The Fear Of The Lord And Find The Knowledge Of God.

நீதிமொழிகள் 2-5 - Proverbs 2-5அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

6 - கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

English:- For The Lord Gives Wisdom, And From His Mouth Come Knowledge And Understanding.

நீதிமொழிகள் 2-6 - Proverbs 2-6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

7 - அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

English:- He Holds Victory In Store For The Upright, He Is A Shield To Those Whose Walk Is Blameless,

நீதிமொழிகள் 2-7 - Proverbs 2-7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

8 - அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

English:- For He Guards The Course Of The Just And Protects The Way Of His Faithful Ones.

நீதிமொழிகள் 2-8 - Proverbs 2-8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

9 - அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

English:- Then You Will Understand What Is Right And Just And Fair-every Good Path.

நீதிமொழிகள் 2-9 - Proverbs 2-9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

10 - ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

English:- For Wisdom Will Enter Your Heart, And Knowledge Will Be Pleasant To Your Soul.


11 - நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

English:- Discretion Will Protect You, And Understanding Will Guard You.

நீதிமொழிகள் 2-11 - Proverbs 2-11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

12 - அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,

English:- Wisdom Will Save You From The Ways Of Wicked Men, From Men Whose Words Are Perverse,

நீதிமொழிகள் 2-12 - Proverbs 2-12அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,

13 - அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,

English:- Who Leave The Straight Paths To Walk In Dark Ways,

நீதிமொழிகள் 2-13 - Proverbs 2-13அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,

14 - தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

English:- Who Delight In Doing Wrong And Rejoice In The Perverseness Of Evil,

நீதிமொழிகள் 2-14 - Proverbs 2-14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

15 - மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

English:- Whose Paths Are Crooked And Who Are Devious In Their Ways.

நீதிமொழிகள் 2-15 - Proverbs 2-15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

16 - தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

English:- It Will Save You Also From The Adulteress, From The Wayward Wife With Her Seductive Words,

நீதிமொழிகள் 2-16 - Proverbs 2-16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

17 - இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

English:- Who Has Left The Partner Of Her Youth And Ignored The Covenant She Made Before God.

நீதிமொழிகள் 2-17 - Proverbs 2-17இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

18 - அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

English:- For Her House Leads Down To Death And Her Paths To The Spirits Of The Dead.

நீதிமொழிகள் 2-18 - Proverbs 2-18அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

19 - அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

English:- None Who Go To Her Return Or Attain The Paths Of Life.

நீதிமொழிகள் 2-19 - Proverbs 2-19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

20 - ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

English:- Thus You Will Walk In The Ways Of Good Men And Keep To The Paths Of The Righteous.


21 - செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

English:- For The Upright Will Live In The Land, And The Blameless Will Remain In It;

நீதிமொழிகள் 2-21 - Proverbs 2-21செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

22 - துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

English:- But The Wicked Will Be Cut Off From The Land, And The Unfaithful Will Be Torn From It.

நீதிமொழிகள் 2-22 - Proverbs 2-22துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.


Previous Chapter Next Chapter