நீதிமொழிகள் 10 – Proverbs 10


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Proverbs Chapter 10 In Tamil With English Reference


1 - சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

English:- The Proverbs Of Solomon: A Wise Son Brings Joy To His Father, But A Foolish Son Grief To His Mother.

நீதிமொழிகள் 10-1 - Proverbs 10-1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

2 - அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

English:- Ill-gotten Treasures Are Of No Value, But Righteousness Delivers From Death.


3 - கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

English:- The Lord Does Not Let The Righteous Go Hungry But He Thwarts The Craving Of The Wicked.

நீதிமொழிகள் 10-3 - Proverbs 10-3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

4 - சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

English:- Lazy Hands Make A Man Poor, But Diligent Hands Bring Wealth.

நீதிமொழிகள் 10-4 - Proverbs 10-4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

5 - கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

English:- He Who Gathers Crops In Summer Is A Wise Son, But He Who Sleeps During Harvest Is A Disgraceful Son.

நீதிமொழிகள் 10-5 - Proverbs 10-5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

6 - நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

English:- Blessings Crown The Head Of The Righteous, But Violence Overwhelms The Mouth Of The Wicked.

நீதிமொழிகள் 10-6 - Proverbs 10-6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

7 - நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

English:- The Memory Of The Righteous Will Be A Blessing, But The Name Of The Wicked Will Rot.

நீதிமொழிகள் 10-7 - Proverbs 10-7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

8 - இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

English:- The Wise In Heart Accept Commands, But A Chattering Fool Comes To Ruin.

நீதிமொழிகள் 10-8 - Proverbs 10-8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

9 - உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

English:- The Man Of Integrity Walks Securely, But He Who Takes Crooked Paths Will Be Found Out.

நீதிமொழிகள் 10-9 - Proverbs 10-9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

10 - கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

English:- He Who Winks Maliciously Causes Grief, And A Chattering Fool Comes To Ruin.


11 - நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

English:- The Mouth Of The Righteous Is A Fountain Of Life, But Violence Overwhelms The Mouth Of The Wicked.

நீதிமொழிகள் 10-11 - Proverbs 10-11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

12 - பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

English:- Hatred Stirs Up Dissension, But Love Covers Over All Wrongs.

நீதிமொழிகள் 10-12 - Proverbs 10-12பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

13 - புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

English:- Wisdom Is Found On The Lips Of The Discerning, But A Rod Is For The Back Of Him Who Lacks Judgment.

நீதிமொழிகள் 10-13 - Proverbs 10-13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

14 - ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

English:- Wise Men Store Up Knowledge, But The Mouth Of A Fool Invites Ruin.

நீதிமொழிகள் 10-14 - Proverbs 10-14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

15 - ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.

English:- The Wealth Of The Rich Is Their Fortified City, But Poverty Is The Ruin Of The Poor.

நீதிமொழிகள் 10-15 - Proverbs 10-15ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.

16 - நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

English:- The Wages Of The Righteous Bring Them Life, But The Income Of The Wicked Brings Them Punishment.

நீதிமொழிகள் 10-16 - Proverbs 10-16நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

17 - புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

English:- He Who Heeds Discipline Shows The Way To Life, But Whoever Ignores Correction Leads Others Astray.

நீதிமொழிகள் 10-17 - Proverbs 10-17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

18 - பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

English:- He Who Conceals His Hatred Has Lying Lips, And Whoever Spreads Slander Is A Fool.

நீதிமொழிகள் 10-18 - Proverbs 10-18பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

19 - சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

English:- When Words Are Many, Sin Is Not Absent, But He Who Holds His Tongue Is Wise.

நீதிமொழிகள் 10-19 - Proverbs 10-19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

20 - நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

English:- The Tongue Of The Righteous Is Choice Silver, But The Heart Of The Wicked Is Of Little Value.


21 - நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

English:- The Lips Of The Righteous Nourish Many, But Fools Die For Lack Of Judgment.

நீதிமொழிகள் 10-21 - Proverbs 10-21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

22 - கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

English:- The Blessing Of The Lord Brings Wealth, And He Adds No Trouble To It.

நீதிமொழிகள் 10-22 - Proverbs 10-22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

23 - தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

English:- A Fool Finds Pleasure In Evil Conduct, But A Man Of Understanding Delights In Wisdom.

நீதிமொழிகள் 10-23 - Proverbs 10-23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

24 - துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

English:- What The Wicked Dreads Will Overtake Him; What The Righteous Desire Will Be Granted.

நீதிமொழிகள் 10-24 - Proverbs 10-24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

25 - சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.

English:- When The Storm Has Swept By, The Wicked Are Gone, But The Righteous Stand Firm Forever.

நீதிமொழிகள் 10-25 - Proverbs 10-25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.

26 - பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

English:- As Vinegar To The Teeth And Smoke To The Eyes, So Is A Sluggard To Those Who Send Him.

நீதிமொழிகள் 10-26 - Proverbs 10-26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

27 - கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

English:- The Fear Of The Lord Adds Length To Life, But The Years Of The Wicked Are Cut Short.

நீதிமொழிகள் 10-27 - Proverbs 10-27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

28 - நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

English:- The Prospect Of The Righteous Is Joy, But The Hopes Of The Wicked Come To Nothing.

நீதிமொழிகள் 10-28 - Proverbs 10-28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

29 - கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

English:- The Way Of The Lord Is A Refuge For The Righteous, But It Is The Ruin Of Those Who Do Evil.

நீதிமொழிகள் 10-29 - Proverbs 10-29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

30 - நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

English:- The Righteous Will Never Be Uprooted, But The Wicked Will Not Remain In The Land.

நீதிமொழிகள் 10-30 - Proverbs 10-30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

31 - நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

English:- The Mouth Of The Righteous Brings Forth Wisdom, But A Perverse Tongue Will Be Cut Out.

நீதிமொழிகள் 10-31 - Proverbs 10-31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

32 - நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

English:- The Lips Of The Righteous Know What Is Fitting, But The Mouth Of The Wicked Only What Is Perverse.

நீதிமொழிகள் 10-32 - Proverbs 10-32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.


Previous Chapter Next Chapter