பரிசுத்த வேதாகமம் மீகா அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Micah Chapter 3 In Tamil With English Reference
1 - நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
English:- Then I Said, "Listen, You Leaders Of Jacob, You Rulers Of The House Of Israel. Should You Not Know Justice,
2 - ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,
English:- You Who Hate Good And Love Evil; Who Tear The Skin From My People And The Flesh From Their Bones;
3 - என் ஜனத்தின் சதையைத்தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.
English:- Who Eat My People's Flesh, Strip Off Their Skin And Break Their Bones In Pieces; Who Chop Them Up Like Meat For The Pan, Like Flesh For The Pot?"
4 - அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
English:- Then They Will Cry Out To The Lord , But He Will Not Answer Them. At That Time He Will Hide His Face From Them Because Of The Evil They Have Done.
5 - தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;
English:- This Is What The Lord Says: "As For The Prophets Who Lead My People Astray, If One Feeds Them, They Proclaim 'Peace'; If He Does Not, They Prepare To Wage War Against Him.
6 - தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.
English:- Therefore Night Will Come Over You, Without Visions, And Darkness, Without Divination. The Sun Will Set For The Prophets, And The Day Will Go Dark For Them.
7 - தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.
English:- The Seers Will Be Ashamed And The Diviners Disgraced. They Will All Cover Their Faces Because There Is No Answer From God."
8 - நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
English:- But As For Me, I Am Filled With Power, With The Spirit Of The Lord , And With Justice And Might, To Declare To Jacob His Transgression, To Israel His Sin.
9 - நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,
English:- Hear This, You Leaders Of The House Of Jacob, You Rulers Of The House Of Israel, Who Despise Justice And Distort All That Is Right;
10 - சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
English:- Who Build Zion With Bloodshed, And Jerusalem With Wickedness.
11 - அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
English:- Her Leaders Judge For A Bribe, Her Priests Teach For A Price, And Her Prophets Tell Fortunes For Money. Yet They Lean Upon The Lord And Say, "Is Not The Lord Among Us? No Disaster Will Come Upon Us."
12 - ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
English:- Therefore Because Of You, Zion Will Be Plowed Like A Field, Jerusalem Will Become A Heap Of Rubble, The Temple Hill A Mound Overgrown With Thickets.