ஆதியாகமம் 5 – Genesis 5


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் ஆதியாகமம் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of Genesis Chapter 5 In Tamil With English Reference


1 - ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.

English:- This Is The Written Account Of Adam's Line. When God Created Man, He Made Him In The Likeness Of God.

ஆதியாகமம் 5-1 - Genesis 5-1ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.

2 - அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

English:- He Created Them Male And Female And Blessed Them. And When They Were Created, He Called Them "Man. "


3 - ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

English:- When Adam Had Lived Years, He Had A Son In His Own Likeness, In His Own Image; And He Named Him Seth.

ஆதியாகமம் 5-3 - Genesis 5-3ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

4 - ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- After Seth Was Born, Adam Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-4 - Genesis 5-4ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

5 - ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Adam Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-5 - Genesis 5-5ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

6 - சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.

English:- When Seth Had Lived Years, He Became The Father Of Enosh.

ஆதியாகமம் 5-6 - Genesis 5-6சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.

7 - சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Enosh, Seth Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-7 - Genesis 5-7சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

8 - சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Seth Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-8 - Genesis 5-8சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

9 - ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

English:- When Enosh Had Lived Years, He Became The Father Of Kenan.

ஆதியாகமம் 5-9 - Genesis 5-9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

10 - ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Kenan, Enosh Lived Years And Had Other Sons And Daughters.


11 - ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Enosh Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-11 - Genesis 5-11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

12 - கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.

English:- When Kenan Had Lived Years, He Became The Father Of Mahalalel.

ஆதியாகமம் 5-12 - Genesis 5-12கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.

13 - கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Mahalalel, Kenan Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-13 - Genesis 5-13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

14 - கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Kenan Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-14 - Genesis 5-14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.

15 - மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

English:- When Mahalalel Had Lived Years, He Became The Father Of Jared.

ஆதியாகமம் 5-15 - Genesis 5-15மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

16 - மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Jared, Mahalalel Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-16 - Genesis 5-16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

17 - மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Mahalalel Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-17 - Genesis 5-17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

18 - யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

English:- When Jared Had Lived Years, He Became The Father Of Enoch.

ஆதியாகமம் 5-18 - Genesis 5-18யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

19 - யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Enoch, Jared Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-19 - Genesis 5-19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

20 - யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Jared Lived Years, And Then He Died.


21 - ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.

English:- When Enoch Had Lived Years, He Became The Father Of Methuselah.

ஆதியாகமம் 5-21 - Genesis 5-21ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.

22 - ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Methuselah, Enoch Walked With God Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-22 - Genesis 5-22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

23 - ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

English:- Altogether, Enoch Lived Years.

ஆதியாகமம் 5-23 - Genesis 5-23ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

24 - ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

English:- Enoch Walked With God; Then He Was No More, Because God Took Him Away.

ஆதியாகமம் 5-24 - Genesis 5-24ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

25 - மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

English:- When Methuselah Had Lived Years, He Became The Father Of Lamech.

ஆதியாகமம் 5-25 - Genesis 5-25மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

26 - மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- And After He Became The Father Of Lamech, Methuselah Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-26 - Genesis 5-26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

27 - மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Methuselah Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-27 - Genesis 5-27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.

28 - லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,

English:- When Lamech Had Lived Years, He Had A Son.

ஆதியாகமம் 5-28 - Genesis 5-28லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,

29 - கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

English:- He Named Him Noah And Said, "He Will Comfort Us In The Labor And Painful Toil Of Our Hands Caused By The Ground The Lord Has Cursed."

ஆதியாகமம் 5-29 - Genesis 5-29கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

30 - லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- After Noah Was Born, Lamech Lived Years And Had Other Sons And Daughters.

ஆதியாகமம் 5-30 - Genesis 5-30லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

31 - லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.

English:- Altogether, Lamech Lived Years, And Then He Died.

ஆதியாகமம் 5-31 - Genesis 5-31லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.

32 - நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

English:- After Noah Was Years Old, He Became The Father Of Shem, Ham And Japheth.

ஆதியாகமம் 5-32 - Genesis 5-32நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.


Previous Chapter Next Chapter