பரிசுத்த வேதாகமம் ஆதியாகமம் அதிகாரம் 36 – Read Holy Bible Book Of Genesis Chapter 36 In Tamil With English Reference
2 - ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
English:- Esau Took His Wives From The Women Of Canaan: Adah Daughter Of Elon The Hittite, And Oholibamah Daughter Of Anah And Granddaughter Of Zibeon The Hivite-
3 - இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.
English:- Also Basemath Daughter Of Ishmael And Sister Of Nebaioth.
4 - ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
English:- Adah Bore Eliphaz To Esau, Basemath Bore Reuel,
5 - அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர்.
English:- And Oholibamah Bore Jeush, Jalam And Korah. These Were The Sons Of Esau, Who Were Born To Him In Canaan.
6 - ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.
English:- Esau Took His Wives And Sons And Daughters And All The Members Of His Household, As Well As His Livestock And All His Other Animals And All The Goods He Had Acquired In Canaan, And Moved To A Land Some Distance From His Brother Jacob.
7 - அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.
English:- Their Possessions Were Too Great For Them To Remain Together; The Land Where They Were Staying Could Not Support Them Both Because Of Their Livestock.
8 - ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.
English:- So Esau (That Is, Edom) Settled In The Hill Country Of Seir.
9 - சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
English:- This Is The Account Of Esau The Father Of The Edomites In The Hill Country Of Seir.
10 - ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.
English:- These Are The Names Of Esau's Sons: Eliphaz, The Son Of Esau's Wife Adah, And Reuel, The Son Of Esau's Wife Basemath.
11 - எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம் கேனாஸ் என்பவர்கள்.
English:- The Sons Of Eliphaz: Teman, Omar, Zepho, Gatam And Kenaz.
12 - திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.
English:- Esau's Son Eliphaz Also Had A Concubine Named Timna, Who Bore Him Amalek. These Were Grandsons Of Esau's Wife Adah.
13 - ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.
English:- The Sons Of Reuel: Nahath, Zerah, Shammah And Mizzah. These Were Grandsons Of Esau's Wife Basemath.
14 - சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள்.
English:- The Sons Of Esau's Wife Oholibamah Daughter Of Anah And Granddaughter Of Zibeon, Whom She Bore To Esau: Jeush, Jalam And Korah.
15 - ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்தமகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
English:- These Were The Chiefs Among Esau's Descendants: The Sons Of Eliphaz The Firstborn Of Esau: Chiefs Teman, Omar, Zepho, Kenaz,
16 - கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
English:- Korah, Gatam And Amalek. These Were The Chiefs Descended From Eliphaz In Edom; They Were Grandsons Of Adah.
17 - ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
English:- The Sons Of Esau's Son Reuel: Chiefs Nahath, Zerah, Shammah And Mizzah. These Were The Chiefs Descended From Reuel In Edom; They Were Grandsons Of Esau's Wife Basemath.
18 - ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
English:- The Sons Of Esau's Wife Oholibamah: Chiefs Jeush, Jalam And Korah. These Were The Chiefs Descended From Esau's Wife Oholibamah Daughter Of Anah.
19 - இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
English:- These Were The Sons Of Esau (That Is, Edom), And These Were Their Chiefs.
20 - அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
English:- These Were The Sons Of Seir The Horite, Who Were Living In The Region: Lotan, Shobal, Zibeon, Anah,
21 - திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
English:- Dishon, Ezer And Dishan. These Sons Of Seir In Edom Were Horite Chiefs.
22 - லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
English:- The Sons Of Lotan: Hori And Homam. Timna Was Lotan's Sister.
23 - சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
English:- The Sons Of Shobal: Alvan, Manahath, Ebal, Shepho And Onam.
24 - சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
English:- The Sons Of Zibeon: Aiah And Anah. This Is The Anah Who Discovered The Hot Springs In The Desert While He Was Grazing The Donkeys Of His Father Zibeon.
25 - ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி.
English:- The Children Of Anah: Dishon And Oholibamah Daughter Of Anah.
26 - திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
English:- The Sons Of Dishon : Hemdan, Eshban, Ithran And Keran.
27 - ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
English:- The Sons Of Ezer: Bilhan, Zaavan And Akan.
29 - ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
English:- These Were The Horite Chiefs: Lotan, Shobal, Zibeon, Anah,
30 - திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
English:- Dishon, Ezer And Dishan. These Were The Horite Chiefs, According To Their Divisions, In The Land Of Seir.
31 - இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களானவர்:
English:- These Were The Kings Who Reigned In Edom Before Any Israelite King Reigned :
32 - பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.
English:- Bela Son Of Beor Became King Of Edom. His City Was Named Dinhabah.
33 - பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்.
English:- When Bela Died, Jobab Son Of Zerah From Bozrah Succeeded Him As King.
34 - யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.
English:- When Jobab Died, Husham From The Land Of The Temanites Succeeded Him As King.
35 - உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
English:- When Husham Died, Hadad Son Of Bedad, Who Defeated Midian In The Country Of Moab, Succeeded Him As King. His City Was Named Avith.
36 - ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
English:- When Hadad Died, Samlah From Masrekah Succeeded Him As King.
37 - சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
English:- When Samlah Died, Shaul From Rehoboth On The River Succeeded Him As King.
38 - சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
English:- When Shaul Died, Baal-hanan Son Of Acbor Succeeded Him As King.
39 - அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
English:- When Baal-hanan Son Of Acbor Died, Hadad Succeeded Him As King. His City Was Named Pau, And His Wife's Name Was Mehetabel Daughter Of Matred, The Daughter Of Me-zahab.
40 - தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,
English:- These Were The Chiefs Descended From Esau, By Name, According To Their Clans And Regions: Timna, Alvah, Jetheth,
43 - மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.
English:- Magdiel And Iram. These Were The Chiefs Of Edom, According To Their Settlements In The Land They Occupied. This Was Esau The Father Of The Edomites.