1 நாளாகமம் 4 – 1 Chronicles 4


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 நாளாகமம் அதிகாரம் 4 – Read Holy Bible Book Of 1 Chronicles Chapter 4 In Tamil With English Reference


1 - யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.

English:- The Descendants Of Judah: Perez, Hezron, Carmi, Hur And Shobal.

1 நாளாகமம் 4-1 - 1 Chronicles 4-1யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.

2 - சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும் லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.

English:- Reaiah Son Of Shobal Was The Father Of Jahath, And Jahath The Father Of Ahumai And Lahad. These Were The Clans Of The Zorathites.


3 - ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;

English:- These Were The Sons Of Etam: Jezreel, Ishma And Idbash. Their Sister Was Named Hazzelelponi.

1 நாளாகமம் 4-3 - 1 Chronicles 4-3ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;

4 - கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

English:- Penuel Was The Father Of Gedor, And Ezer The Father Of Hushah. These Were The Descendants Of Hur, The Firstborn Of Ephrathah And Father Of Bethlehem.

1 நாளாகமம் 4-4 - 1 Chronicles 4-4கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

5 - தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.

English:- Ashhur The Father Of Tekoa Had Two Wives, Helah And Naarah.

1 நாளாகமம் 4-5 - 1 Chronicles 4-5தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.

6 - நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.

English:- Naarah Bore Him Ahuzzam, Hepher, Temeni And Haahashtari. These Were The Descendants Of Naarah.

1 நாளாகமம் 4-6 - 1 Chronicles 4-6நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.

7 - ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.

English:- The Sons Of Helah: Zereth, Zohar, Ethnan,

1 நாளாகமம் 4-7 - 1 Chronicles 4-7ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.

8 - கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.

English:- And Koz, Who Was The Father Of Anub And Hazzobebah And Of The Clans Of Aharhel Son Of Harum.

1 நாளாகமம் 4-8 - 1 Chronicles 4-8கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.

9 - யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

English:- Jabez Was More Honorable Than His Brothers. His Mother Had Named Him Jabez, Saying, "I Gave Birth To Him In Pain."

1 நாளாகமம் 4-9 - 1 Chronicles 4-9யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

10 - யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

English:- Jabez Cried Out To The God Of Israel, "Oh, That You Would Bless Me And Enlarge My Territory! Let Your Hand Be With Me, And Keep Me From Harm So That I Will Be Free From Pain." And God Granted His Request.


11 - சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.

English:- Kelub, Shuhah's Brother, Was The Father Of Mehir, Who Was The Father Of Eshton.

1 நாளாகமம் 4-11 - 1 Chronicles 4-11சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.

12 - எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.

English:- Eshton Was The Father Of Beth Rapha, Paseah And Tehinnah The Father Of Ir Nahash. These Were The Men Of Recah.

1 நாளாகமம் 4-12 - 1 Chronicles 4-12எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.

13 - கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.

English:- The Sons Of Kenaz: Othniel And Seraiah. The Sons Of Othniel: Hathath And Meonothai.

1 நாளாகமம் 4-13 - 1 Chronicles 4-13கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.

14 - மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.

English:- Meonothai Was The Father Of Ophrah. Seraiah Was The Father Of Joab, The Father Of Ge Harashim. It Was Called This Because Its People Were Craftsmen.

1 நாளாகமம் 4-14 - 1 Chronicles 4-14மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.

15 - எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.

English:- The Sons Of Caleb Son Of Jephunneh: Iru, Elah And Naam. The Son Of Elah: Kenaz.

1 நாளாகமம் 4-15 - 1 Chronicles 4-15எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.

16 - எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.

English:- The Sons Of Jehallelel: Ziph, Ziphah, Tiria And Asarel.

1 நாளாகமம் 4-16 - 1 Chronicles 4-16எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.

17 - எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.

English:- The Sons Of Ezrah: Jether, Mered, Epher And Jalon. One Of Mered's Wives Gave Birth To Miriam, Shammai And Ishbah The Father Of Eshtemoa.

1 நாளாகமம் 4-17 - 1 Chronicles 4-17எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.

18 - அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும, சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.

English:- (His Judean Wife Gave Birth To Jered The Father Of Gedor, Heber The Father Of Soco, And Jekuthiel The Father Of Zanoah.) These Were The Children Of Pharaoh's Daughter Bithiah, Whom Mered Had Married.

1 நாளாகமம் 4-18 - 1 Chronicles 4-18அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும, சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.

19 - நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே.

English:- The Sons Of Hodiah's Wife, The Sister Of Naham: The Father Of Keilah The Garmite, And Eshtemoa The Maacathite.

1 நாளாகமம் 4-19 - 1 Chronicles 4-19நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே.

20 - ஷீமோனின் குமாரர், அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் குமாரர், சோகேதும் பென்சோகேதுமே.

English:- The Sons Of Shimon: Amnon, Rinnah, Ben-hanan And Tilon. The Descendants Of Ishi: Zoheth And Ben-zoheth.


21 - யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்,

English:- The Sons Of Shelah Son Of Judah: Er The Father Of Lecah, Laadah The Father Of Mareshah And The Clans Of The Linen Workers At Beth Ashbea,

1 நாளாகமம் 4-21 - 1 Chronicles 4-21யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்,

22 - யோயாக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.

English:- Jokim, The Men Of Cozeba, And Joash And Saraph, Who Ruled In Moab And Jashubi Lehem. (These Records Are From Ancient Times.)

1 நாளாகமம் 4-22 - 1 Chronicles 4-22யோயாக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.

23 - இவர்கள் குயவராயிருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்

English:- They Were The Potters Who Lived At Netaim And Gederah; They Stayed There And Worked For The King.

1 நாளாகமம் 4-23 - 1 Chronicles 4-23இவர்கள் குயவராயிருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்

24 - சிமியோனின் குமாரர், நெமுவேல்,யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.

English:- The Descendants Of Simeon: Nemuel, Jamin, Jarib, Zerah And Shaul;

1 நாளாகமம் 4-24 - 1 Chronicles 4-24சிமியோனின் குமாரர், நெமுவேல்,யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.

25 - இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.

English:- Shallum Was Shaul's Son, Mibsam His Son And Mishma His Son.

1 நாளாகமம் 4-25 - 1 Chronicles 4-25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.

26 - மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.

English:- The Descendants Of Mishma: Hammuel His Son, Zaccur His Son And Shimei His Son.

1 நாளாகமம் 4-26 - 1 Chronicles 4-26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.

27 - சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.

English:- Shimei Had Sixteen Sons And Six Daughters, But His Brothers Did Not Have Many Children; So Their Entire Clan Did Not Become As Numerous As The People Of Judah.

1 நாளாகமம் 4-27 - 1 Chronicles 4-27சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.

28 - அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்குவாவிலும்,

English:- They Lived In Beersheba, Moladah, Hazar Shual,

1 நாளாகமம் 4-28 - 1 Chronicles 4-28அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்குவாவிலும்,

29 - பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,

English:- Bilhah, Ezem, Tolad,

1 நாளாகமம் 4-29 - 1 Chronicles 4-29பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,

30 - பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,

English:- Bethuel, Hormah, Ziklag,

1 நாளாகமம் 4-30 - 1 Chronicles 4-30பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,

31 - பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.

English:- Beth Marcaboth, Hazar Susim, Beth Biri And Shaaraim. These Were Their Towns Until The Reign Of David.

1 நாளாகமம் 4-31 - 1 Chronicles 4-31பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.

32 - அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.

English:- Their Surrounding Villages Were Etam, Ain, Rimmon, Token And Ashan-five Towns-

1 நாளாகமம் 4-32 - 1 Chronicles 4-32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.

33 - அந்த பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.

English:- And All The Villages Around These Towns As Far As Baalath. These Were Their Settlements. And They Kept A Genealogical Record.

1 நாளாகமம் 4-33 - 1 Chronicles 4-33அந்த பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.

34 - மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,

English:- Meshobab, Jamlech, Joshah Son Of Amaziah,

1 நாளாகமம் 4-34 - 1 Chronicles 4-34மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,

35 - யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,

English:- Joel, Jehu Son Of Joshibiah, The Son Of Seraiah, The Son Of Asiel,

1 நாளாகமம் 4-35 - 1 Chronicles 4-35யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,

36 - எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும் பெனாயாவும்,

English:- Also Elioenai, Jaakobah, Jeshohaiah, Asaiah, Adiel, Jesimiel, Benaiah,

1 நாளாகமம் 4-36 - 1 Chronicles 4-36எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும் பெனாயாவும்,

37 - செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,

English:- And Ziza Son Of Shiphi, The Son Of Allon, The Son Of Jedaiah, The Son Of Shimri, The Son Of Shemaiah.

1 நாளாகமம் 4-37 - 1 Chronicles 4-37செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,

38 - பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள், இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.

English:- The Men Listed Above By Name Were Leaders Of Their Clans. Their Families Increased Greatly,

1 நாளாகமம் 4-38 - 1 Chronicles 4-38பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள், இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.

39 - தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,

English:- And They Went To The Outskirts Of Gedor To The East Of The Valley In Search Of Pasture For Their Flocks.

1 நாளாகமம் 4-39 - 1 Chronicles 4-39தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,

40 - நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.

English:- They Found Rich, Good Pasture, And The Land Was Spacious, Peaceful And Quiet. Some Hamites Had Lived There Formerly.

1 நாளாகமம் 4-40 - 1 Chronicles 4-40நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.

41 - பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.

English:- The Men Whose Names Were Listed Came In The Days Of Hezekiah King Of Judah. They Attacked The Hamites In Their Dwellings And Also The Meunites Who Were There And Completely Destroyed Them, As Is Evident To This Day. Then They Settled In Their Place, Because There Was Pasture For Their Flocks.

1 நாளாகமம் 4-41 - 1 Chronicles 4-41பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.

42 - சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,

English:- And Five Hundred Of These Simeonites, Led By Pelatiah, Neariah, Rephaiah And Uzziel, The Sons Of Ishi, Invaded The Hill Country Of Seir.

1 நாளாகமம் 4-42 - 1 Chronicles 4-42சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,

43 - அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.

English:- They Killed The Remaining Amalekites Who Had Escaped, And They Have Lived There To This Day.

1 நாளாகமம் 4-43 - 1 Chronicles 4-43அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.


Previous Chapter Next Chapter