உன்னதப்பாட்டு 2 – Song of Songs 2


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் உன்னதப்பாட்டு அதிகாரம் 2 – Read Holy Bible Book Of Song of Songs Chapter 2 In Tamil With English Reference


1 - நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.

English:- I Am A Rose Of Sharon, A Lily Of The Valleys.

உன்னதப்பாட்டு 2-1 - Song of Solomon 2-1நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.

2 - முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.

English:- Like A Lily Among Thorns Is My Darling Among The Maidens.


3 - காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

English:- Like An Apple Tree Among The Trees Of The Forest Is My Lover Among The Young Men. I Delight To Sit In His Shade, And His Fruit Is Sweet To My Taste.

உன்னதப்பாட்டு 2-3 - Song of Solomon 2-3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

4 - என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

English:- He Has Taken Me To The Banquet Hall, And His Banner Over Me Is Love.

உன்னதப்பாட்டு 2-4 - Song of Solomon 2-4என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

5 - திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.

English:- Strengthen Me With Raisins, Refresh Me With Apples, For I Am Faint With Love.

உன்னதப்பாட்டு 2-5 - Song of Solomon 2-5திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.

6 - அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.

English:- His Left Arm Is Under My Head, And His Right Arm Embraces Me.

உன்னதப்பாட்டு 2-6 - Song of Solomon 2-6அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.

7 - எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

English:- Daughters Of Jerusalem, I Charge You By The Gazelles And By The Does Of The Field: Do Not Arouse Or Awaken Love Until It So Desires.

உன்னதப்பாட்டு 2-7 - Song of Solomon 2-7எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

8 - இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.

English:- Listen! My Lover! Look! Here He Comes, Leaping Across The Mountains, Bounding Over The Hills.

உன்னதப்பாட்டு 2-8 - Song of Solomon 2-8இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.

9 - என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

English:- My Lover Is Like A Gazelle Or A Young Stag. Look! There He Stands Behind Our Wall, Gazing Through The Windows, Peering Through The Lattice.

உன்னதப்பாட்டு 2-9 - Song of Solomon 2-9என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

10 - என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.

English:- My Lover Spoke And Said To Me, "Arise, My Darling, My Beautiful One, And Come With Me.


11 - இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.

English:- See! The Winter Is Past; The Rains Are Over And Gone.

உன்னதப்பாட்டு 2-11 - Song of Solomon 2-11இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.

12 - பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.

English:- Flowers Appear On The Earth; The Season Of Singing Has Come, The Cooing Of Doves Is Heard In Our Land.

உன்னதப்பாட்டு 2-12 - Song of Solomon 2-12பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.

13 - அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.

English:- The Fig Tree Forms Its Early Fruit; The Blossoming Vines Spread Their Fragrance. Arise, Come, My Darling; My Beautiful One, Come With Me."

உன்னதப்பாட்டு 2-13 - Song of Solomon 2-13அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.

14 - கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

English:- My Dove In The Clefts Of The Rock, In The Hiding Places On The Mountainside, Show Me Your Face, Let Me Hear Your Voice; For Your Voice Is Sweet, And Your Face Is Lovely.

உன்னதப்பாட்டு 2-14 - Song of Solomon 2-14கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

15 - திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.

English:- Catch For Us The Foxes, The Little Foxes That Ruin The Vineyards, Our Vineyards That Are In Bloom.

உன்னதப்பாட்டு 2-15 - Song of Solomon 2-15திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.

16 - என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

English:- My Lover Is Mine And I Am His; He Browses Among The Lilies.

உன்னதப்பாட்டு 2-16 - Song of Solomon 2-16என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

17 - என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

English:- Until The Day Breaks And The Shadows Flee, Turn, My Lover, And Be Like A Gazelle Or Like A Young Stag On The Rugged Hills.

உன்னதப்பாட்டு 2-17 - Song of Solomon 2-17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.


Previous Chapter Next Chapter