சங்கீதம் 148 – Psalms 148


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 148 – Read Holy Bible Book Of Psalms Chapter 148 In Tamil With English Reference


1 - அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

English:- Praise The Lord . Praise The Lord From The Heavens, Praise Him In The Heights Above.

சங்கீதம் 148-1 - Psalms 148-1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

2 - அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him, All His Angels, Praise Him, All His Heavenly Hosts.


3 - சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him, Sun And Moon, Praise Him, All You Shining Stars.

சங்கீதம் 148-3 - Psalms 148-3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

4 - வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

English:- Praise Him, You Highest Heavens And You Waters Above The Skies.

சங்கீதம் 148-4 - Psalms 148-4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

5 - அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

English:- Let Them Praise The Name Of The Lord , For He Commanded And They Were Created.

சங்கீதம் 148-5 - Psalms 148-5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

6 - அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

English:- He Set Them In Place For Ever And Ever; He Gave A Decree That Will Never Pass Away.

சங்கீதம் 148-6 - Psalms 148-6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

7 - பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகா மச்சங்களே, சகல ஆழங்களே,

English:- Praise The Lord From The Earth, You Great Sea Creatures And All Ocean Depths,

சங்கீதம் 148-7 - Psalms 148-7பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகா மச்சங்களே, சகல ஆழங்களே,

8 - அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

English:- Lightning And Hail, Snow And Clouds, Stormy Winds That Do His Bidding,

சங்கீதம் 148-8 - Psalms 148-8அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

9 - மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

English:- You Mountains And All Hills, Fruit Trees And All Cedars,

சங்கீதம் 148-9 - Psalms 148-9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

10 - காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,

English:- Wild Animals And All Cattle, Small Creatures And Flying Birds,


11 - பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

English:- Kings Of The Earth And All Nations, You Princes And All Rulers On Earth,

சங்கீதம் 148-11 - Psalms 148-11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

12 - வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

English:- Young Men And Maidens, Old Men And Children.

சங்கீதம் 148-12 - Psalms 148-12வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

13 - அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

English:- Let Them Praise The Name Of The Lord , For His Name Alone Is Exalted; His Splendor Is Above The Earth And The Heavens.

சங்கீதம் 148-13 - Psalms 148-13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

14 - அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

English:- He Has Raised Up For His People A Horn, The Praise Of All His Saints, Of Israel, The People Close To His Heart. Praise The Lord .

சங்கீதம் 148-14 - Psalms 148-14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.


Previous Chapter Next Chapter