நீதிமொழிகள் 9 – Proverbs 9


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 9 – Read Holy Bible Book Of Proverbs Chapter 9 In Tamil With English Reference


1 - ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

English:- Wisdom Has Built Her House; She Has Hewn Out Its Seven Pillars.

நீதிமொழிகள் 9-1 - Proverbs 9-1ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

2 - தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

English:- She Has Prepared Her Meat And Mixed Her Wine; She Has Also Set Her Table.


3 - தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

English:- She Has Sent Out Her Maids, And She Calls From The Highest Point Of The City.

நீதிமொழிகள் 9-3 - Proverbs 9-3தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

4 - புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.

English:- "Let All Who Are Simple Come In Here!" She Says To Those Who Lack Judgment.

நீதிமொழிகள் 9-4 - Proverbs 9-4புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.

5 - நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

English:- "Come, Eat My Food And Drink The Wine I Have Mixed.

நீதிமொழிகள் 9-5 - Proverbs 9-5நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

6 - பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

English:- Leave Your Simple Ways And You Will Live; Walk In The Way Of Understanding.

நீதிமொழிகள் 9-6 - Proverbs 9-6பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

7 - பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

English:- "Whoever Corrects A Mocker Invites Insult; Whoever Rebukes A Wicked Man Incurs Abuse.

நீதிமொழிகள் 9-7 - Proverbs 9-7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

8 - பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

English:- Do Not Rebuke A Mocker Or He Will Hate You; Rebuke A Wise Man And He Will Love You.

நீதிமொழிகள் 9-8 - Proverbs 9-8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

9 - ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

English:- Instruct A Wise Man And He Will Be Wiser Still; Teach A Righteous Man And He Will Add To His Learning.

நீதிமொழிகள் 9-9 - Proverbs 9-9ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

10 - கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

English:- "The Fear Of The Lord Is The Beginning Of Wisdom, And Knowledge Of The Holy One Is Understanding.


11 - என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

English:- For Through Me Your Days Will Be Many, And Years Will Be Added To Your Life.

நீதிமொழிகள் 9-11 - Proverbs 9-11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

12 - நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.

English:- If You Are Wise, Your Wisdom Will Reward You; If You Are A Mocker, You Alone Will Suffer."

நீதிமொழிகள் 9-12 - Proverbs 9-12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.

13 - மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

English:- The Woman Folly Is Loud; She Is Undisciplined And Without Knowledge.

நீதிமொழிகள் 9-13 - Proverbs 9-13மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

14 - அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,

English:- She Sits At The Door Of Her House, On A Seat At The Highest Point Of The City,

நீதிமொழிகள் 9-14 - Proverbs 9-14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,

15 - தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:

English:- Calling Out To Those Who Pass By, Who Go Straight On Their Way.

நீதிமொழிகள் 9-15 - Proverbs 9-15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:

16 - எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

English:- "Let All Who Are Simple Come In Here!" She Says To Those Who Lack Judgment.

நீதிமொழிகள் 9-16 - Proverbs 9-16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

17 - மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

English:- "Stolen Water Is Sweet; Food Eaten In Secret Is Delicious!"

நீதிமொழிகள் 9-17 - Proverbs 9-17மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

18 - ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

English:- But Little Do They Know That The Dead Are There, That Her Guests Are In The Depths Of The Grave.

நீதிமொழிகள் 9-18 - Proverbs 9-18ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.


Previous Chapter Next Chapter