நீதிமொழிகள் 23 – Proverbs 23


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 23 – Read Holy Bible Book Of Proverbs Chapter 23 In Tamil With English Reference


1 - நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

English:- When You Sit To Dine With A Ruler, Note Well What Is Before You,

நீதிமொழிகள் 23-1 - Proverbs 23-1நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

2 - நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

English:- And Put A Knife To Your Throat If You Are Given To Gluttony.


3 - அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

English:- Do Not Crave His Delicacies, For That Food Is Deceptive.

நீதிமொழிகள் 23-3 - Proverbs 23-3அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

4 - ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

English:- Do Not Wear Yourself Out To Get Rich; Have The Wisdom To Show Restraint.

நீதிமொழிகள் 23-4 - Proverbs 23-4ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

5 - இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

English:- Cast But A Glance At Riches, And They Are Gone, For They Will Surely Sprout Wings And Fly Off To The Sky Like An Eagle.

நீதிமொழிகள் 23-5 - Proverbs 23-5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

6 - வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

English:- Do Not Eat The Food Of A Stingy Man, Do Not Crave His Delicacies;

நீதிமொழிகள் 23-6 - Proverbs 23-6வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

7 - அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.

English:- For He Is The Kind Of Man Who Is Always Thinking About The Cost. "Eat And Drink," He Says To You, But His Heart Is Not With You.

நீதிமொழிகள் 23-7 - Proverbs 23-7அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.

8 - நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.

English:- You Will Vomit Up The Little You Have Eaten And Will Have Wasted Your Compliments.

நீதிமொழிகள் 23-8 - Proverbs 23-8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.

9 - மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

English:- Do Not Speak To A Fool, For He Will Scorn The Wisdom Of Your Words.

நீதிமொழிகள் 23-9 - Proverbs 23-9மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

10 - பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

English:- Do Not Move An Ancient Boundary Stone Or Encroach On The Fields Of The Fatherless,


11 - அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

English:- For Their Defender Is Strong; He Will Take Up Their Case Against You.

நீதிமொழிகள் 23-11 - Proverbs 23-11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

12 - உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

English:- Apply Your Heart To Instruction And Your Ears To Words Of Knowledge.

நீதிமொழிகள் 23-12 - Proverbs 23-12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

13 - பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

English:- Do Not Withhold Discipline From A Child; If You Punish Him With The Rod, He Will Not Die.

நீதிமொழிகள் 23-13 - Proverbs 23-13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

14 - நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

English:- Punish Him With The Rod And Save His Soul From Death.

நீதிமொழிகள் 23-14 - Proverbs 23-14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

15 - என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

English:- My Son, If Your Heart Is Wise, Then My Heart Will Be Glad;

நீதிமொழிகள் 23-15 - Proverbs 23-15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

16 - உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.

English:- My Inmost Being Will Rejoice When Your Lips Speak What Is Right.

நீதிமொழிகள் 23-16 - Proverbs 23-16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.

17 - உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

English:- Do Not Let Your Heart Envy Sinners, But Always Be Zealous For The Fear Of The Lord .

நீதிமொழிகள் 23-17 - Proverbs 23-17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

18 - நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

English:- There Is Surely A Future Hope For You, And Your Hope Will Not Be Cut Off.

நீதிமொழிகள் 23-18 - Proverbs 23-18நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

19 - என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

English:- Listen, My Son, And Be Wise, And Keep Your Heart On The Right Path.

நீதிமொழிகள் 23-19 - Proverbs 23-19என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

20 - மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.

English:- Do Not Join Those Who Drink Too Much Wine Or Gorge Themselves On Meat,


21 - குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

English:- For Drunkards And Gluttons Become Poor, And Drowsiness Clothes Them In Rags.

நீதிமொழிகள் 23-21 - Proverbs 23-21குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

22 - உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

English:- Listen To Your Father, Who Gave You Life, And Do Not Despise Your Mother When She Is Old.

நீதிமொழிகள் 23-22 - Proverbs 23-22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

23 - சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

English:- Buy The Truth And Do Not Sell It; Get Wisdom, Discipline And Understanding.

நீதிமொழிகள் 23-23 - Proverbs 23-23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

24 - நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

English:- The Father Of A Righteous Man Has Great Joy; He Who Has A Wise Son Delights In Him.

நீதிமொழிகள் 23-24 - Proverbs 23-24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

25 - உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

English:- May Your Father And Mother Be Glad; May She Who Gave You Birth Rejoice!

நீதிமொழிகள் 23-25 - Proverbs 23-25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

26 - என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

English:- My Son, Give Me Your Heart And Let Your Eyes Keep To My Ways,

நீதிமொழிகள் 23-26 - Proverbs 23-26என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

27 - வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

English:- For A Prostitute Is A Deep Pit And A Wayward Wife Is A Narrow Well.

நீதிமொழிகள் 23-27 - Proverbs 23-27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

28 - அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.

English:- Like A Bandit She Lies In Wait, And Multiplies The Unfaithful Among Men.

நீதிமொழிகள் 23-28 - Proverbs 23-28அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.

29 - ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

English:- Who Has Woe? Who Has Sorrow? Who Has Strife? Who Has Complaints? Who Has Needless Bruises? Who Has Bloodshot Eyes?

நீதிமொழிகள் 23-29 - Proverbs 23-29ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

30 - மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

English:- Those Who Linger Over Wine, Who Go To Sample Bowls Of Mixed Wine.

நீதிமொழிகள் 23-30 - Proverbs 23-30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

31 - மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

English:- Do Not Gaze At Wine When It Is Red, When It Sparkles In The Cup, When It Goes Down Smoothly!

நீதிமொழிகள் 23-31 - Proverbs 23-31மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

32 - முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

English:- In The End It Bites Like A Snake And Poisons Like A Viper.

நீதிமொழிகள் 23-32 - Proverbs 23-32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

33 - உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

English:- Your Eyes Will See Strange Sights And Your Mind Imagine Confusing Things.

நீதிமொழிகள் 23-33 - Proverbs 23-33உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

34 - நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.

English:- You Will Be Like One Sleeping On The High Seas, Lying On Top Of The Rigging.

நீதிமொழிகள் 23-34 - Proverbs 23-34நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.

35 - என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

English:- "They Hit Me," You Will Say, "But I'm Not Hurt! They Beat Me, But I Don't Feel It! When Will I Wake Up So I Can Find Another Drink?"

நீதிமொழிகள் 23-35 - Proverbs 23-35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.


Previous Chapter Next Chapter