நீதிமொழிகள் 12 – Proverbs 12


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 12 – Read Holy Bible Book Of Proverbs Chapter 12 In Tamil With English Reference


1 - புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

English:- Whoever Loves Discipline Loves Knowledge, But He Who Hates Correction Is Stupid.

நீதிமொழிகள் 12-1 - Proverbs 12-1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

2 - நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.

English:- A Good Man Obtains Favor From The Lord , But The Lord Condemns A Crafty Man.


3 - துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.

English:- A Man Cannot Be Established Through Wickedness, But The Righteous Cannot Be Uprooted.

நீதிமொழிகள் 12-3 - Proverbs 12-3துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.

4 - குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

English:- A Wife Of Noble Character Is Her Husband's Crown, But A Disgraceful Wife Is Like Decay In His Bones.

நீதிமொழிகள் 12-4 - Proverbs 12-4குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

5 - நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.

English:- The Plans Of The Righteous Are Just, But The Advice Of The Wicked Is Deceitful.

நீதிமொழிகள் 12-5 - Proverbs 12-5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.

6 - துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப் பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

English:- The Words Of The Wicked Lie In Wait For Blood, But The Speech Of The Upright Rescues Them.

நீதிமொழிகள் 12-6 - Proverbs 12-6துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப் பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

7 - துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

English:- Wicked Men Are Overthrown And Are No More, But The House Of The Righteous Stands Firm.

நீதிமொழிகள் 12-7 - Proverbs 12-7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

8 - தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

English:- A Man Is Praised According To His Wisdom, But Men With Warped Minds Are Despised.

நீதிமொழிகள் 12-8 - Proverbs 12-8தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

9 - ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

English:- Better To Be A Nobody And Yet Have A Servant Than Pretend To Be Somebody And Have No Food.

நீதிமொழிகள் 12-9 - Proverbs 12-9ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

10 - நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.

English:- A Righteous Man Cares For The Needs Of His Animal, But The Kindest Acts Of The Wicked Are Cruel.


11 - தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

English:- He Who Works His Land Will Have Abundant Food, But He Who Chases Fantasies Lacks Judgment.

நீதிமொழிகள் 12-11 - Proverbs 12-11தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

12 - துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

English:- The Wicked Desire The Plunder Of Evil Men, But The Root Of The Righteous Flourishes.

நீதிமொழிகள் 12-12 - Proverbs 12-12துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

13 - துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.

English:- An Evil Man Is Trapped By His Sinful Talk, But A Righteous Man Escapes Trouble.

நீதிமொழிகள் 12-13 - Proverbs 12-13துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.

14 - அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

English:- From The Fruit Of His Lips A Man Is Filled With Good Things As Surely As The Work Of His Hands Rewards Him.

நீதிமொழிகள் 12-14 - Proverbs 12-14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

15 - மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

English:- The Way Of A Fool Seems Right To Him, But A Wise Man Listens To Advice.

நீதிமொழிகள் 12-15 - Proverbs 12-15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

16 - மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

English:- A Fool Shows His Annoyance At Once, But A Prudent Man Overlooks An Insult.

நீதிமொழிகள் 12-16 - Proverbs 12-16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

17 - சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

English:- A Truthful Witness Gives Honest Testimony, But A False Witness Tells Lies.

நீதிமொழிகள் 12-17 - Proverbs 12-17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

18 - பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.

English:- Reckless Words Pierce Like A Sword, But The Tongue Of The Wise Brings Healing.

நீதிமொழிகள் 12-18 - Proverbs 12-18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.

19 - சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

English:- Truthful Lips Endure Forever, But A Lying Tongue Lasts Only A Moment.

நீதிமொழிகள் 12-19 - Proverbs 12-19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

20 - தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.

English:- There Is Deceit In The Hearts Of Those Who Plot Evil, But Joy For Those Who Promote Peace.


21 - நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

English:- No Harm Befalls The Righteous, But The Wicked Have Their Fill Of Trouble.

நீதிமொழிகள் 12-21 - Proverbs 12-21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

22 - பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

English:- The Lord Detests Lying Lips, But He Delights In Men Who Are Truthful.

நீதிமொழிகள் 12-22 - Proverbs 12-22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

23 - விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.

English:- A Prudent Man Keeps His Knowledge To Himself, But The Heart Of Fools Blurts Out Folly.

நீதிமொழிகள் 12-23 - Proverbs 12-23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.

24 - ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.

English:- Diligent Hands Will Rule, But Laziness Ends In Slave Labor.

நீதிமொழிகள் 12-24 - Proverbs 12-24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.

25 - மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

English:- An Anxious Heart Weighs A Man Down, But A Kind Word Cheers Him Up.

நீதிமொழிகள் 12-25 - Proverbs 12-25மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

26 - நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

English:- A Righteous Man Is Cautious In Friendship, But The Way Of The Wicked Leads Them Astray.

நீதிமொழிகள் 12-26 - Proverbs 12-26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

27 - சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

English:- The Lazy Man Does Not Roast His Game, But The Diligent Man Prizes His Possessions.

நீதிமொழிகள் 12-27 - Proverbs 12-27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

28 - நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

English:- In The Way Of Righteousness There Is Life; Along That Path Is Immortality.

நீதிமொழிகள் 12-28 - Proverbs 12-28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.


Previous Chapter Next Chapter