புலம்பல் 3 – Lamentations 3


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் புலம்பல் அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Lamentations Chapter 3 In Tamil With English Reference


1 - ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.

English:- I Am The Man Who Has Seen Affliction By The Rod Of His Wrath.

புலம்பல் 3-1 - Lamentations 3-1ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.

2 - அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

English:- He Has Driven Me Away And Made Me Walk In Darkness Rather Than Light;


3 - அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

English:- Indeed, He Has Turned His Hand Against Me Again And Again, All Day Long.

புலம்பல் 3-3 - Lamentations 3-3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

4 - என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

English:- He Has Made My Skin And My Flesh Grow Old And Has Broken My Bones.

புலம்பல் 3-4 - Lamentations 3-4என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

5 - அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

English:- He Has Besieged Me And Surrounded Me With Bitterness And Hardship.

புலம்பல் 3-5 - Lamentations 3-5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

6 - பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

English:- He Has Made Me Dwell In Darkness Like Those Long Dead.

புலம்பல் 3-6 - Lamentations 3-6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

7 - நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

English:- He Has Walled Me In So I Cannot Escape; He Has Weighed Me Down With Chains.

புலம்பல் 3-7 - Lamentations 3-7நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

8 - நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

English:- Even When I Call Out Or Cry For Help, He Shuts Out My Prayer.

புலம்பல் 3-8 - Lamentations 3-8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

9 - வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

English:- He Has Barred My Way With Blocks Of Stone; He Has Made My Paths Crooked.

புலம்பல் 3-9 - Lamentations 3-9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

10 - அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

English:- Like A Bear Lying In Wait, Like A Lion In Hiding,


11 - என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.

English:- He Dragged Me From The Path And Mangled Me And Left Me Without Help.

புலம்பல் 3-11 - Lamentations 3-11என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.

12 - தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

English:- He Drew His Bow And Made Me The Target For His Arrows.

புலம்பல் 3-12 - Lamentations 3-12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

13 - தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

English:- He Pierced My Heart With Arrows From His Quiver.

புலம்பல் 3-13 - Lamentations 3-13தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

14 - நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

English:- I Became The Laughingstock Of All My People; They Mock Me In Song All Day Long.

புலம்பல் 3-14 - Lamentations 3-14நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

15 - கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

English:- He Has Filled Me With Bitter Herbs And Sated Me With Gall.

புலம்பல் 3-15 - Lamentations 3-15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

16 - அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

English:- He Has Broken My Teeth With Gravel; He Has Trampled Me In The Dust.

புலம்பல் 3-16 - Lamentations 3-16அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

17 - என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

English:- I Have Been Deprived Of Peace; I Have Forgotten What Prosperity Is.

புலம்பல் 3-17 - Lamentations 3-17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

18 - என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

English:- So I Say, "My Splendor Is Gone And All That I Had Hoped From The Lord ."

புலம்பல் 3-18 - Lamentations 3-18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

19 - எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

English:- I Remember My Affliction And My Wandering, The Bitterness And The Gall.

புலம்பல் 3-19 - Lamentations 3-19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

20 - என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.

English:- I Well Remember Them, And My Soul Is Downcast Within Me.


21 - இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

English:- Yet This I Call To Mind And Therefore I Have Hope:

புலம்பல் 3-21 - Lamentations 3-21இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

22 - நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

English:- Because Of The Lord 'S Great Love We Are Not Consumed, For His Compassions Never Fail.

புலம்பல் 3-22 - Lamentations 3-22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

23 - அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

English:- They Are New Every Morning; Great Is Your Faithfulness.

புலம்பல் 3-23 - Lamentations 3-23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

24 - கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

English:- I Say To Myself, "The Lord Is My Portion; Therefore I Will Wait For Him."

புலம்பல் 3-24 - Lamentations 3-24கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

25 - தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

English:- The Lord Is Good To Those Whose Hope Is In Him, To The One Who Seeks Him;

புலம்பல் 3-25 - Lamentations 3-25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

26 - கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

English:- It Is Good To Wait Quietly For The Salvation Of The Lord .

புலம்பல் 3-26 - Lamentations 3-26கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

27 - தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

English:- It Is Good For A Man To Bear The Yoke While He Is Young.

புலம்பல் 3-27 - Lamentations 3-27தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

28 - அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.

English:- Let Him Sit Alone In Silence, For The Lord Has Laid It On Him.

புலம்பல் 3-28 - Lamentations 3-28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.

29 - நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.

English:- Let Him Bury His Face In The Dust- There May Yet Be Hope.

புலம்பல் 3-29 - Lamentations 3-29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.

30 - தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

English:- Let Him Offer His Cheek To One Who Would Strike Him, And Let Him Be Filled With Disgrace.

புலம்பல் 3-30 - Lamentations 3-30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

31 - ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

English:- For Men Are Not Cast Off By The Lord Forever.

புலம்பல் 3-31 - Lamentations 3-31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

32 - அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

English:- Though He Brings Grief, He Will Show Compassion, So Great Is His Unfailing Love.

புலம்பல் 3-32 - Lamentations 3-32அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

33 - அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

English:- For He Does Not Willingly Bring Affliction Or Grief To The Children Of Men.

புலம்பல் 3-33 - Lamentations 3-33அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

34 - ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

English:- To Crush Underfoot All Prisoners In The Land,

புலம்பல் 3-34 - Lamentations 3-34ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

35 - உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

English:- To Deny A Man His Rights Before The Most High,

புலம்பல் 3-35 - Lamentations 3-35உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

36 - மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?

English:- To Deprive A Man Of Justice- Would Not The Lord See Such Things?

புலம்பல் 3-36 - Lamentations 3-36மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?

37 - ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

English:- Who Can Speak And Have It Happen If The Lord Has Not Decreed It?

புலம்பல் 3-37 - Lamentations 3-37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

38 - உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

English:- Is It Not From The Mouth Of The Most High That Both Calamities And Good Things Come?

புலம்பல் 3-38 - Lamentations 3-38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

39 - உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

English:- Why Should Any Living Man Complain When Punished For His Sins?

புலம்பல் 3-39 - Lamentations 3-39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

40 - நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

English:- Let Us Examine Our Ways And Test Them, And Let Us Return To The Lord .

புலம்பல் 3-40 - Lamentations 3-40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

41 - நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

English:- Let Us Lift Up Our Hearts And Our Hands To God In Heaven, And Say:

புலம்பல் 3-41 - Lamentations 3-41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

42 - நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

English:- "We Have Sinned And Rebelled And You Have Not Forgiven.

புலம்பல் 3-42 - Lamentations 3-42நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

43 - தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

English:- "You Have Covered Yourself With Anger And Pursued Us; You Have Slain Without Pity.

புலம்பல் 3-43 - Lamentations 3-43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

44 - ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

English:- You Have Covered Yourself With A Cloud So That No Prayer Can Get Through.

புலம்பல் 3-44 - Lamentations 3-44ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

45 - ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

English:- You Have Made Us Scum And Refuse Among The Nations.

புலம்பல் 3-45 - Lamentations 3-45ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

46 - எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

English:- "All Our Enemies Have Opened Their Mouths Wide Against Us.

புலம்பல் 3-46 - Lamentations 3-46எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

47 - திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

English:- We Have Suffered Terror And Pitfalls, Ruin And Destruction."

புலம்பல் 3-47 - Lamentations 3-47திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

48 - என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

English:- Streams Of Tears Flow From My Eyes Because My People Are Destroyed.

புலம்பல் 3-48 - Lamentations 3-48என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

49 - கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,

English:- My Eyes Will Flow Unceasingly, Without Relief,

புலம்பல் 3-49 - Lamentations 3-49கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,

50 - என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.

English:- Until The Lord Looks Down From Heaven And Sees.

புலம்பல் 3-50 - Lamentations 3-50என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.

51 - என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.

English:- What I See Brings Grief To My Soul Because Of All The Women Of My City.

புலம்பல் 3-51 - Lamentations 3-51என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.

52 - முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

English:- Those Who Were My Enemies Without Cause Hunted Me Like A Bird.

புலம்பல் 3-52 - Lamentations 3-52முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

53 - காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.

English:- They Tried To End My Life In A Pit And Threw Stones At Me;

புலம்பல் 3-53 - Lamentations 3-53காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.

54 - தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

English:- The Waters Closed Over My Head, And I Thought I Was About To Be Cut Off.

புலம்பல் 3-54 - Lamentations 3-54தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

55 - மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

English:- I Called On Your Name, O Lord , From The Depths Of The Pit.

புலம்பல் 3-55 - Lamentations 3-55மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

56 - என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.

English:- You Heard My Plea: "Do Not Close Your Ears To My Cry For Relief."

புலம்பல் 3-56 - Lamentations 3-56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.

57 - நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.

English:- You Came Near When I Called You, And You Said, "Do Not Fear."

புலம்பல் 3-57 - Lamentations 3-57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.

58 - ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.

English:- O Lord, You Took Up My Case; You Redeemed My Life.

புலம்பல் 3-58 - Lamentations 3-58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.

59 - கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

English:- You Have Seen, O Lord , The Wrong Done To Me. Uphold My Cause!

புலம்பல் 3-59 - Lamentations 3-59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

60 - அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

English:- You Have Seen The Depth Of Their Vengeance, All Their Plots Against Me.

புலம்பல் 3-60 - Lamentations 3-60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

61 - கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

English:- O Lord , You Have Heard Their Insults, All Their Plots Against Me-

புலம்பல் 3-61 - Lamentations 3-61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

62 - எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

English:- What My Enemies Whisper And Mutter Against Me All Day Long.

புலம்பல் 3-62 - Lamentations 3-62எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

63 - அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

English:- Look At Them! Sitting Or Standing, They Mock Me In Their Songs.

புலம்பல் 3-63 - Lamentations 3-63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

64 - கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.

English:- Pay Them Back What They Deserve, O Lord , For What Their Hands Have Done.

புலம்பல் 3-64 - Lamentations 3-64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.

65 - அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள் மேல் இருக்கும்.

English:- Put A Veil Over Their Hearts, And May Your Curse Be On Them!

புலம்பல் 3-65 - Lamentations 3-65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள் மேல் இருக்கும்.

66 - கோபமாய் அவர்களைப் பின் தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

English:- Pursue Them In Anger And Destroy Them From Under The Heavens Of The Lord .

புலம்பல் 3-66 - Lamentations 3-66கோபமாய் அவர்களைப் பின் தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.


Previous Chapter Next Chapter