1 நாளாகமம் 23 – 1 Chronicles 23


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 நாளாகமம் அதிகாரம் 23 – Read Holy Bible Book Of 1 Chronicles Chapter 23 In Tamil With English Reference


1 - தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.

English:- When David Was Old And Full Of Years, He Made His Son Solomon King Over Israel.

1 நாளாகமம் 23-1 - 1 Chronicles 23-1தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.

2 - இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.

English:- He Also Gathered Together All The Leaders Of Israel, As Well As The Priests And Levites.


3 - அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள், தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.

English:- The Levites Thirty Years Old Or More Were Counted, And The Total Number Of Men Was Thirty-eight Thousand.

1 நாளாகமம் 23-3 - 1 Chronicles 23-3அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள், தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.

4 - அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,

English:- David Said, "Of These, Twenty-four Thousand Are To Supervise The Work Of The Temple Of The Lord And Six Thousand Are To Be Officials And Judges.

1 நாளாகமம் 23-4 - 1 Chronicles 23-4அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,

5 - நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

English:- Four Thousand Are To Be Gatekeepers And Four Thousand Are To Praise The Lord With The Musical Instruments I Have Provided For That Purpose."

1 நாளாகமம் 23-5 - 1 Chronicles 23-5நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

6 - அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

English:- David Divided The Levites Into Groups Corresponding To The Sons Of Levi: Gershon, Kohath And Merari.

1 நாளாகமம் 23-6 - 1 Chronicles 23-6அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

7 - கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.

English:- Belonging To The Gershonites: Ladan And Shimei.

1 நாளாகமம் 23-7 - 1 Chronicles 23-7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.

8 - லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

English:- The Sons Of Ladan: Jehiel The First, Zetham And Joel-three In All.

1 நாளாகமம் 23-8 - 1 Chronicles 23-8லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

9 - சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.

English:- The Sons Of Shimei: Shelomoth, Haziel And Haran-three In All. These Were The Heads Of The Families Of Ladan.

1 நாளாகமம் 23-9 - 1 Chronicles 23-9சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.

10 - யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.

English:- And The Sons Of Shimei: Jahath, Ziza, Jeush And Beriah. These Were The Sons Of Shimei-four In All.


11 - யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.

English:- Jahath Was The First And Ziza The Second, But Jeush And Beriah Did Not Have Many Sons; So They Were Counted As One Family With One Assignment.

1 நாளாகமம் 23-11 - 1 Chronicles 23-11யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.

12 - கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.

English:- The Sons Of Kohath: Amram, Izhar, Hebron And Uzziel-four In All.

1 நாளாகமம் 23-12 - 1 Chronicles 23-12கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.

13 - அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.

English:- The Sons Of Amram: Aaron And Moses. Aaron Was Set Apart, He And His Descendants Forever, To Consecrate The Most Holy Things, To Offer Sacrifices Before The Lord , To Minister Before Him And To Pronounce Blessings In His Name Forever.

1 நாளாகமம் 23-13 - 1 Chronicles 23-13அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.

14 - தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.

English:- The Sons Of Moses The Man Of God Were Counted As Part Of The Tribe Of Levi.

1 நாளாகமம் 23-14 - 1 Chronicles 23-14தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.

15 - மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.

English:- The Sons Of Moses: Gershom And Eliezer.

1 நாளாகமம் 23-15 - 1 Chronicles 23-15மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.

16 - கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.

English:- The Descendants Of Gershom: Shubael Was The First.

1 நாளாகமம் 23-16 - 1 Chronicles 23-16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.

17 - எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.

English:- The Descendants Of Eliezer: Rehabiah Was The First. Eliezer Had No Other Sons, But The Sons Of Rehabiah Were Very Numerous.

1 நாளாகமம் 23-17 - 1 Chronicles 23-17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்: எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.

18 - இத்சேரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.

English:- The Sons Of Izhar: Shelomith Was The First.

1 நாளாகமம் 23-18 - 1 Chronicles 23-18இத்சேரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.

19 - எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.

English:- The Sons Of Hebron: Jeriah The First, Amariah The Second, Jahaziel The Third And Jekameam The Fourth.

1 நாளாகமம் 23-19 - 1 Chronicles 23-19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல் நாலாவது எக்காமியாம்.

20 - ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.

English:- The Sons Of Uzziel: Micah The First And Isshiah The Second.


21 - மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

English:- The Sons Of Merari: Mahli And Mushi. The Sons Of Mahli: Eleazar And Kish.

1 நாளாகமம் 23-21 - 1 Chronicles 23-21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

22 - எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.

English:- Eleazar Died Without Having Sons: He Had Only Daughters. Their Cousins, The Sons Of Kish, Married Them.

1 நாளாகமம் 23-22 - 1 Chronicles 23-22எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.

23 - மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.

English:- The Sons Of Mushi: Mahli, Eder And Jerimoth-three In All.

1 நாளாகமம் 23-23 - 1 Chronicles 23-23மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.

24 - தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.

English:- These Were The Descendants Of Levi By Their Families-the Heads Of Families As They Were Registered Under Their Names And Counted Individually, That Is, The Workers Twenty Years Old Or More Who Served In The Temple Of The Lord .

1 நாளாகமம் 23-24 - 1 Chronicles 23-24தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.

25 - இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும்,

English:- For David Had Said, "Since The Lord , The God Of Israel, Has Granted Rest To His People And Has Come To Dwell In Jerusalem Forever,

1 நாளாகமம் 23-25 - 1 Chronicles 23-25இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும்,

26 - இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத்தேவையில்லை என்றும்,

English:- The Levites No Longer Need To Carry The Tabernacle Or Any Of The Articles Used In Its Service."

1 நாளாகமம் 23-26 - 1 Chronicles 23-26இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத்தேவையில்லை என்றும்,

27 - தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.

English:- According To The Last Instructions Of David, The Levites Were Counted From Those Twenty Years Old Or More.

1 நாளாகமம் 23-27 - 1 Chronicles 23-27தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.

28 - அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,

English:- The Duty Of The Levites Was To Help Aaron's Descendants In The Service Of The Temple Of The Lord : To Be In Charge Of The Courtyards, The Side Rooms, The Purification Of All Sacred Things And The Performance Of Other Duties At The House Of God.

1 நாளாகமம் 23-28 - 1 Chronicles 23-28அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,

29 - சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,

English:- They Were In Charge Of The Bread Set Out On The Table, The Flour For The Grain Offerings, The Unleavened Wafers, The Baking And The Mixing, And All Measurements Of Quantity And Size.

1 நாளாகமம் 23-29 - 1 Chronicles 23-29சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,

30 - நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,

English:- They Were Also To Stand Every Morning To Thank And Praise The Lord . They Were To Do The Same In The Evening

1 நாளாகமம் 23-30 - 1 Chronicles 23-30நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,

31 - இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,

English:- And Whenever Burnt Offerings Were Presented To The Lord On Sabbaths And At New Moon Festivals And At Appointed Feasts. They Were To Serve Before The Lord Regularly In The Proper Number And In The Way Prescribed For Them.

1 நாளாகமம் 23-31 - 1 Chronicles 23-31இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும்,

32 - ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது.

English:- And So The Levites Carried Out Their Responsibilities For The Tent Of Meeting, For The Holy Place And, Under Their Brothers The Descendants Of Aaron, For The Service Of The Temple Of The Lord .

1 நாளாகமம் 23-32 - 1 Chronicles 23-32ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது.


Previous Chapter Next Chapter